இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 16 ஜனவரி, 2011
கையேந்தும் இளம் கன்றுகள்
கொஞ்ச நாட்களுக்கு முன் பேருந்து நிலையத்தில் நான் கண்ட காட்சி நெஞ்சை பதறவைக்கும் வகையில் இருந்தது. பதினான்கு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி , குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என நமது அரசு பல திட்டங்களை நடைமுறை படுத்தி வருகிறது. எனினும் பேருந்து நிலையங்களில் மூன்று வயது கூட நிரம்பாத குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பேருந்து நிலையத்தை சுற்றிலும் இது போன்று குறைந்தது பத்து குழந்தைகளாவது நடமாடுகின்றனர். அக்குழந்தைகள் வெளிமாநிலங்களில் இருந்து கடத்தப் பட்டவர்கள் போல் தெரிகிறது. வந்து போகின்ற மக்களின் கால்களை பிடித்துகொண்டு பிச்சை கேட்டு தொந்தரவு செய்கின்றனர் . பாவம் என்று பரிதாபப்பட்டு , எதாவது கொடுத்து விட்டு பேருந்தில் ஏறினால் அங்கு இரண்டு மூன்று குழந்தைகள் ஏதாவது தாங்க என்று காசும் தரும் வரை காலை பிடித்துக்கொண்டு விடுவதே இல்லை. காசு கொடுக்கவில்லையென்றால் ,வயதில் பெரியவர்கள் என்று கூட பாராமல் திட்டி விட்டு அடுத்த இடத்தை நோக்கிச் செல்கின்றனர். அக்குழந்தைகள் ஏதோ ஒரு கும்பலால் கடத்தப்பட்டு , அவைகள் மூலம் அனுப்பப் படுவது போலதான் தெரிகிறது. நாளைய இந்தியாவின் நம்பிக்கை தூண்களான பிஞ்சுகளுக்கு கல்வியைவிட பாதுகாப்புதான் முக்கியம். அரசு இதற்கு தக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக