மாவிலை தோரணம் கட்டி ,மண்பானையில் பொங்கல் வைத்து,பசுவிற்கு படையலிட்டு, ஊர் கூடி உணவுண்டு, உரி அடித்து ,காளை அடக்கி ,காகத்திற்கும் கனுப் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டிய பொங்கல் பண்டிகை இன்று நான்கு சினிமா , நடிகர்களின் பெட்டி,எசெமஎஸ்இல்
பொங்கல் வாழ்த்தோடு முடிகிறது. நமது பாரம்பர்ய வழக்கங்களை கூட இன்று ஊடகங்கள் நினைவு படுத்தும் நிலையில்தான் பலரும் இருக்கிறோம். வெளிநாட்டவர்கள் நமது கலாச்சாரத்தின் பெருமை உணர்ந்து போற்றிகொன்டிருக்க நாமோ தடம் மாறும் மேற்கத்திய நாகரிகத்தில் மூல்கியிருகிறோம். திக்கெட்டும் புகழ் மனம் பரப்பும் நமது தமிழ் பாரம்பர்யத்தையும் , கலாச்சாரத்தையும் மறவாமல் பின்பற்றி வாழ்வில் முன்னேறுவோம். தமிழர்களுக்கும், தமிழை போற்றுபவர்களுகும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக